Posts

Showing posts from April, 2015

காத்திருத்தல்

Image
காத்திருத்தல்   அவள் மட்டும் தனியாக இருந்தாள்  திருட்டுப் பூனையாய் வீட்டினுள் நுழைந்தேன்  எட்டாக்  கொடிக் கம்பியில் எட்டி எட்டி  துணிக் காயப் போட்டுகொண்டிருந்தாள்  பின்னால் சென்று , அடிவயிற்றுக்கு மேல் விரல் பதித்து, தோள் இடுக்கில் முகம் புதைத்தேன்.  கண்டு கொண்டாள் , நானென்று  விருட்டென்று திரும்பினாள் !!!!! கரங்கள் அவளிடையில் நின்றுகொண்டது  பத்திரமாக ... மூச்சும் மூச்சும் கலந்துகொண்டன  அடுத்தென்ன??? -என்பதுபோல் பார்த்தாள்  சுவற்றில் சாத்தினேன்  கால்களால் அண்டைகொடுத்து கொண்டாள்  கண்கள் ஏனோ மூடியே கிடந்தன , வேகமாய் வெளியேறினேன் நான்  காத்திருக்கட்டும் !!! பெற்றுகொள்வதை விட , காத்திருத்தல் சுகமானதே !!!                                                     _  தமிழ்மறவோன் .