விழிமொழியாள்
விழிமொழியாள் **கொலைக்காரி** " இமை விரித்து விழித் திறந்து உடல் நுழைந்து உயிர் துளைக்கும் கொலைக்காரி நீ" *************************************** "வில்லாய் ஏறி இறங்கும் அப்புருவமது எனை இரக்கமின்றி இழுத்துச் சென்று யாருமற்ற இன்பவெளியில் இட்டுசெல்கிறது .. இன்பத்தில் தனியாய் உழல்கிறேன் நான் !!!" ************************************** **சாக விரும்புகிறேன் ** "சாக விரும்புகிறேன் நான் ஆம்,கத்தியாய் சீறும் அவ்விரு கண்களால் கொன்றுவிடு.. அந்த மரணமும் துச்சம் தான்" -தமிழ்மறவோன்