மலர்கள் மலரும் தருணம் !!!
மலர்கள் மலரும் தருணம் !!! இரவுகள் ஒவ்வொன்றும் நீ ஆனாய் . . . என் நினைவுகள் எங்கெங்கும் நிலை ஆனாய் உன்னை நான் மறக்கும் நாளெது??? நான் என் மரணத்தை முத்தமிடும் நாளது உன்னிடம் பேசி பழகிய நாட்கள் அதிகமில்லை உன்னை பார்க்காத நாள் நான் நானாக இல்லை என்னை மிதக்க செய்து மயக்கிச் செல்லும் உன் அழகு முன் - கையேந்தி நிற்குமடி இவ்வுலகு அனுமதி இன்றி என்னுள் நுழைந்த உன் பின் -என் கால்கள் என் அனுமதி இன்றி திரியுதடி உன் மல்லிகைப் பூ வாசத்திற்கு