காத்திருத்தல்
காத்திருத்தல்
அவள் மட்டும் தனியாக இருந்தாள்
திருட்டுப் பூனையாய் வீட்டினுள் நுழைந்தேன்
எட்டாக் கொடிக் கம்பியில் எட்டி எட்டி
துணிக் காயப் போட்டுகொண்டிருந்தாள்
பின்னால் சென்று ,
அடிவயிற்றுக்கு மேல் விரல் பதித்து,
தோள் இடுக்கில் முகம் புதைத்தேன்.
கண்டு கொண்டாள் , நானென்று
விருட்டென்று திரும்பினாள் !!!!!
கரங்கள் அவளிடையில் நின்றுகொண்டது
பத்திரமாக ...
மூச்சும் மூச்சும் கலந்துகொண்டன
அடுத்தென்ன??? -என்பதுபோல் பார்த்தாள்
சுவற்றில் சாத்தினேன்
கால்களால் அண்டைகொடுத்து கொண்டாள்
கண்கள் ஏனோ மூடியே கிடந்தன ,
வேகமாய் வெளியேறினேன் நான்
காத்திருக்கட்டும் !!!
பெற்றுகொள்வதை விட ,
காத்திருத்தல் சுகமானதே !!!
_ தமிழ்மறவோன் .
Comments
Post a Comment