கண்ணம்மாக்களுக்கு பிடித்த ஏசப்பா - 2
நேற்று ஒரு பதிவு எழுதி இருந்தேன் , ” கண்ணம்மாக்களுக்கு பிடித்த ஏசப்பா ” என்று . ஆமாம் அது நடக்க கூடியதுதான் . நானும் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கிறிஸ்துராஜா பள்ளியில் தான் படித்தேன் . அங்கும் இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி அரங்கேறும் . ஆனால் , யாரும் எவரையும் கட்டாயப்படுத்தமாட்டார்கள் . அதிலும் குறிப்பாக மார்ச் மாதம் சூசையப்பருக்கு உகந்த்து என்று அந்த மாதத்தின் ஒவ்வொரு புதன் அன்றும் ’ லாரன்ஸ் ஹால் ’ பின்புறம் இருக்கும் சின்ன கிரவுண்டில் வழிபாடு நடக்கும் . யாராவது ஒரு பாதிரியார் வந்து ஜெபம் செய்வார் . ஏதேதோ பெரிய வாக்கியங்களாக சொல்லி இறுதியில் ” புனித சூசையப்பரே எங்களது மன்றாட்டை கேட்டருளும் ” என்று சொல்ல சொல்வார்கள் . அது ஏன் எதற்கென்றெல்லாம் தெரியாது ; ஆனால் , அது சொல்வதற்கு நன்றாக இருக்கும் . ( சொல்லிப்பாருங்கள் – புனித சூசையப்பரே எங்களது மன்றாட்டை கேட்டருளும் – நல்லா இருக்குல்ல ??) அதுமட்டுமல்லாது , பூசை முடிவில் அப்பமும் பழரசமும் தருவார்கள் ; அதை ஞானஸ்நானம் பெற்றவர்கள் மட்டும்தான் வாங்கவேண்