Posts

Showing posts from March, 2017

பேத்தையன்

பேத்தையன் ~ பேத்தையன் தெரியுமா உங்களுக்கு? பொல்லாத பயல் அவன். ஆழம் குறைவாக இருக்கும் கடல் பகுதிகளில் வாழும் அரியவகை மீன் அது. எப்படி இடத்துக்கு தகுந்தபடி, நேரத்திற்கு தகுந்தபடி மாறிக்கொள்பவர்களை நிலத்தில் பச்சோந்தியுடன் ஒப்பிடுகிறோமோ, அதற்கு சிறிதும் குறைவில்லாதவன் இந்த பேத்தையன். ஆம், தன்னை விட பெரிய மீன் ஏதாவது அதை உண்ண வரும்போது தண்ணீரை தனக்குள் இழுத்துக்கொண்டு தனது உடலை பலூன் போல ஊதச்செய்து உருவத்தை மாற்றிக்கொள்ளும். உண்ண வந்த மீனோ குழம்பி திரும்பிச்சென்றுவிடும். மேலும் அவ்வாறு ஊதச்செய்கையில் அதன் மேல் இருக்கும் முட்கள் மற்ற மீன்களை குத்தி கொன்றுவிடும். இது பெரும்பாலும் கடல்புரத்திலே வாழ்ந்தாலும், ஆறுகளிலும் வாழும் தன்மையுடையது. இந்த மீனை தண்ணீரிலிருந்து வெளியே எடுத்தாலும் காற்றை தன்னுள் இழுத்துக்கொண்டு உருவத்தை மாற்றிக்கொண்டு நம்மை மிரட்டி நமக்கே விபூதி அடிக்க பார்க்கும். நம்மை சுற்றியும் பேத்தையன்கள் நிரம்பிக் கிடக்கின்றன(ர்)! ஜாக்கிரதை.. (சோர்ஸ்: தி இந்து & கூகுளாண்டவர்!) - பிகு 31-1-03-2017

ஜி.ஸ்பாட்டும் - உச்சமடைதலும்!

50000 கொடுத்தால் உச்சமடையலாம்! 0 50,000 ரூபாய் கொடுத்தால் போதும் (பெண்கள் மட்டும்). உடலுறவில் உச்சத்தை அடையலாம் என்ற ரீதியில் இந்தியா டுடே-வில் ஒரு கட்டுரை. அப்படி என்ன தான் இருக்கு என்று உள்ளே களமாடினால், பொதுவெளியில் தெரியாமல் புது புது விஷயங்கள் சமூகத்தில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. விஷயம் இதுதான் ஆண்களுக்கு வயாகரா போல் பெண்களுக்கு ‘ADDYL’ என்றொரு மேட்டர் வந்திருக்கிறது. அதன் விலைதான் 50,000. நான்கு மாதங்களுக்கு இதன் வீரியம் இருக்குமாம். ஜி.ஸ்பாட் பற்றி அநேக பேர் கேள்விப்பட்டிருப்போம். படாதவர்களுக்காக மேலோட்டமாக சொல்கிறேன். ஜி.ஸ்பாட் என்பது உடலுறவின் போது உணர்ச்சிகளை தூண்டக்கூடிய ஒரு பகுதி அல்லது உறுப்பு என்றுக்கூட வைத்துக்கொள்ளலாம். ஒரு பெண் உச்சமடைவதற்கு இந்த ஜி.ஸ்பாட் ரொம்ப முக்கியம். உதாரணமாக, ஒரு பெண்ணின் தொடையிடுக்கு, பிறப்புறுப்பின் மேற்பகுதி, மார்பு காம்புகள், பின்னங்கழுத்து, உள்ளங்கால் பாதம் போன்ற இடங்கள் சொல்லப்படுவதுண்டு. இந்த இடங்களை தூண்டுவதன் மூலம் ஒரு பெண்ணை பலமுறை உச்சம் அடைய வைக்கலாம். இவை மட்டுமன்றி வேறு சில பாகங்களும் இருக்கும்; ஒவ்வொரு பெண்

#சென்னை_டேஸ்

கண்டக்டர் எல்லாம் ஒரு முடிவோட தான் இருக்காங்க போல. அன்னிக்கு ஒரு சம்பவம் சொன்னேன்ல, அதேமாதிரி நேத்து ஒண்ணு. ஜெயின் காலேஜ் டூ ஐஐடி போயிட்டிருக்கேன். பெருங்குடில ஒரு பொண்ணு ஏறுது. தலையில வழக்கமான மண்டக்கட்டு, காதுல ஹியர்போன், ஜீன்-டாப். பஸ்ஸோட முன் கதவு பக்கத்துல கண்டக்டர் உட்கார்ந்து இருந்தாரு. அந்த பொண்ணு ஏறுன உடனே டிக்கெட்னு கேட்ட நம்மாள கண்டுக்காம கடைசி சீட்டுல போய் உட்காந்துகிச்சு. நம்மாளு கடுப்பாயிட்டாப்ல. ஏதோ வாய்க்குள்ள முனங்கிகிட்டே போயி டிக்கெட் கொடுத்துட்டு பழைய இடத் துலயே வந்து உட்கார்ந்துட்டாரு. பின்னாடியே பதறிப்போய் ஓடி வந்த அந்த பொண்ணு, "அண்ணே, பத்து ரூபாய் கொடுத்தேன். ஏழு ரூபாய் டிக்கெட் போக மீதி மூணு ருபாய் தரணும், நீங்க ஒரு ரூபாய் தான் தந்துருக்கீங்க"னு சொல்லிட்டு மீதி சில்லறைய வாங்கிட்டு போகுது. "ஒழுங்கா மொதல்லயே டிக்கெட் வாங்கிட்டு போயிருந்தா இப்படி பண்ணிருக்க மாட்டேன்ல; நீ என்னைய அலைய வச்ச, நான் உன்னைய வர வச்சேன்" என்று மைண்ட் வாய்ஸில் சத்தமாக அந்த கண்டக்டர் 'சார்' பேசியதை இந்த பஞ்சகல்யாணி பதிவாக்கி புளங்காகிதம் அடைந்தான்!!! -பஞ்சகல்

பாம்பு சட்டை - சினிமா

பாம்பு சட்டை . இந்த படத்திற்கு தான் போக வேண்டுமென்றெல்லாம் எந்த திட்டமுமில்லை. எந்த படத்திற்கு டிக்கெட் கிடைத்தாலும் போய்விடலாம் என்ற நிலையில் தானிருந்தோம். துரதிர்ஷ்டவசமாக பாம்பு சட்டை கிடைத்தது.  நாயகன் தன்னோட பணத்தேவைக்காக ஒரு கள்ளநோட்டு கும்பலிடம் செல்கிறான், அங்கு ஏமாற்றப்படுகிறான்; பின்னர் என்ன நடக்கிறது? ஹீரோ என்னவாகிறார், பணம் கிடைத்ததா என்பது மீதிக்கதை. எடுத்துக்கொண்ட ஒன்லைன் ஓகே என்றாலும் அதை கதையாக்கியதில் நிறைய தடுமாற்றங்கள். ஆங்காங்கே வசனங்கள் தெறிக்கவிடுகின்றன.  சில காட்சிகள் தான் என்றாலும் சார்லி ஸ்கோர் செய்கிறார். விதவை மறுமணம், துப்புரவு தொழிலாளியின் நிலை போன்ற முற்போக்கு விஷயங்களெல்லாம் பேசினாலும் ஹீரோயினை டார்ச்சர் பண்ணியே லவ் வர வைக்கும் இடத்தில் இயக்குனர் கடுப்பேத்துகிறார். பாபி சிம்ஹாவும், கீர்த்தி சுரேஷும் யார் மோசமாக நடிப்பதென்று போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள். (ஏம்ப்பா..பாபி உன்ன பெரிய நடிகனுலாப்பா நினைச்சேன்). கீ.சு அழகாகவே இருக்கிறார், வாயை திறக்காதவரையில். மொட்டை ராஜேந்திரன் காமெடி சொல்லுமளவுக்கில்லை.  பின்னணி இரைச்சல். 'தாமி

#வாசகசாலை 4

#வாசகசாலையின் இலக்கிய செயல்பாடுகள் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பல்வேறு தளங்களில் சிறப்பாக தொடர்ச்சியாக இயங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ”ஈழத் தமிழ் எழுத்தாளர் வரிசை” என்ற தொடர் நிகழ்வில் இந்த முறை திரு. அ.முத்துலிங்கம் அவர்களின் சமீபத்திய வெளியீடான ’ஆட்டுப்பால் புட்டு’ சிறுகதைத் தொகுப்பு குறித்த கலந்துரையாடல் வடபழனி ப்யூர் சினிமா புத்தக அங்காடியில் நடைப்பெற்றது. சிறப்புரையாற்ற தோழர். செல்வா அவர்களும் வாசகர் பார்வையில் சிந்து அக்காவும் நானும் பேசினோம். தேர்ந்தெடுத்த கதைகளின் மூலம் நுட்பமான விஷயங்களை மிக அழகாக கோர்வையாக பேசினார் சிந்து. சீக்கிரம் முடித்தது போலிருந்தது; இன்னும் கொஞ்சம் நேரம் பேசியிருக்கலாம் என்பதென் எண்ணம். அடுத்ததாக என் முறை. ஓரளவு வாசிப்பு அறிமுகம் இருந்தாலும் ஒரு முழு இலக்கிய நிகழ்வில் ஒரு மூத்த எழுத்தாளரை பேசுவதென்பது எனக்கு முற்றிலும் புதிது. அ.முத்துலிங்கத்தின் கதைகளையும் கட்டுரைகளையும் ஆங்காங்கு கொஞ்சம் வாசித்ததுண்டு. அவரின் எழுத்தில் இருக்கும் நகைச்சுவை உணர்வு, அவர் பயன்படுத்தும் உவமைகள், அவரது விவரணைகள் மற்றும் அவரது எழுத்தில் தென்படும் சில டெக்னிக்கல் வ

அ.முத்துலிங்கம் சிறுகதைகள் (ஆட்டுப்பால் புட்டு)

1.                சிம்மாசனம்    தினமும் 5 நிமிடம் பிந்திவரும் சோமபாலாவுக்கு வயது முப்பதுக்குள்தான் இருக்கும். ஆறடி உயரமாக இருப்பான். அடிமரக்குத்திகளை   தோளிலே அனாயாசமாக தூக்கி எறிவதை கண்டிருக்கிறேன். அப்படிச் செய்யும்போது அவன் புஜத்தில் திரளும் தசைநார்கள் முறுகி உருண்டு பெருகி புஜத்தை உடைத்து வெளியே வந்துவிடுமோ என்ற அச்சத்தையூட்டும். கைகட்டி முன்னே நின்றான். ஆசனத்தில் உட்காரமாட்டான். அவன் கையில் பிடித்திருந்த அட்டையை நீட்டினான். ஐந்து நிமிடம் பிந்தி வந்ததால் வருகை நேரம் அட்டையில் சிவப்பாக அச்சடிக்கப்பட்டிருந்தது. ஆயிரம் பேர் வேலைசெய்யும் அந்த தொழிற்சாலையில் 6 மாதம் முன்னர்தான் வருகை பதிவு மணிக்கூடுகள் இரண்டை நிறுவியிருந்தார்கள். தொழிலாளிகள்   நிரையாக வந்து தங்கள் தங்கள் அட்டைகளை மணிக்கூட்டில் செருகி   வருகை நேரத்தை பதிவுசெய்வார்கள். 5 நிமிடம் பிந்தி வந்தால் 15 நிமிடக் கூலி வெட்டப்படும். 15 நிமிடம் பிந்தி வந்தால் அரைமணி நேரக் கூலி. அரை மணி பிந்தி வந்தால் ஒரு மணிநேரக்கூலி. ஒரு மணி நேரம் பிந்தி வந்தால் தொழிலாளி அன்று உள்ளே அனுமதிக்கப்படமாட்டார். . சோமபாலா தினமும் பிந்தி வந்