Posts

Showing posts from August, 2015

ஓர் மழை ஞாயிறு

*"ஓர் மழை ஞாயிறு"*                                                         -தமிழ்மறவோன்  ஓர் ஞாயிறு மதியத்தின் மத்தியில் நாங்கள் இருவரும் சேர்ந்து சமைத்த பாகற்காய் வறுவலையும் கொள்ளு ரசத்தையும் பிரண்டை துவலையும் சாப்பிட்டு முடித்தோம்.ஆம் நாங்கள் சைவம் (உணவில்).  இன்று வானம் ஏனோ இருட்டிக் கிடந்தது.வார நாட்களில் ஏற்படும் வேலைப் பளுவினால் ஞாயிறுகளில் கடோத்கஜனாய் உண்டு கும்ப கர்ணனாய் உறங்க விருப்பமில்லை.பெரும்பாலும் ஞாயிறுகள் தான் எங்களை புதுப்பித்துக்கொள்ள உதவுகிறது.நாங்கள் எங்களை உணர்ந்துக்கொள்ள, புரிந்துக்கொள்ள வழிவகுக்கிறது.சாப்பிட்ட பின், வாசலில் நாற்காலியிட்டு அமர்ந்தேன். மழை வருவது போலிருந்தது, இன்பமாயிருந்தது.அவளும் சேர்ந்துக் கொண்டாள்.இன்பம் இருமடங்கு!!! கைகளில் நீர்மோர்;"மழை வரும்போல் இருக்கிறதே,இந்நேரத்தில் மோரா?"இது நான்."நான் விரும்பி செய்தது வேண்டுமானால் குடி", இது அவள்.மறுபேச்சின்றி ஒரே மடக்கில் முடித்தேன்.  "ஷேல் வி ப்ளே கார்ட்ஸ்" என்ற அவளது அழைபபுக்கு மறுக்காது மறுநொடியே "யா ஷ்யூர் டியர்" என்று ஆரம்பித்தோம் .மிக

நாய் காதல்

****நாய் காதல்*****  (கதையல்ல நிஜம்)   நேற்று கோவில்பட்டியில் இருந்து நெல்லை செல்வதற்காக பேருந்தில் ஏறினேன்.பேருந்தில் இருவர் அமரும் இருக்கையில் பெரும்பாலும் ஜோடி ஜோடியாக கல்லூரி இளசுகள் அமர்ந்திருந்தனர்.நல்லவேளையாக கணடக்டர் ஸீட் ப்ரீயாக இருந்ததால் அதில் அமர்ந்துக்கொண்டேன்  (தனியாக தான்).காதில் செவிட்டு மெஷினை (ஹியர்போன்) மாட்டிக்கொண்டு இளையராஜாவை ஓடவிட்டேன்.சற்றே கண் அயர்ந்தேன்.திடிரென்று விழித்துப் பார்த்தபோது எனக்கு முன் இருக்கையில் ஒரு புது ஜோடி முளைத்திருந்தது.இரண்டுமே கல்லூரி சிட்டுகள்.கொஞ்ச நேரம் நல்லாதான் போயிட்டு இருந்தது.திடிர்னு அந்த பய பைய கைய நீட்டுனான்.அந்த பிள்ளையும் யாரும் பார்க்காங்களானு பார்ததுட்டு கைய கோர்த்துக்கிச்சு.அப்ப நான் பார்க்காத மாதிரி இருந்துகிட்டேன்(காறித் துப்புபவர்கள் எச்சில் தெறிக்காமல் துப்பிக்கொள்ளவும்)கைய பிடிக்கிறதும், தோள்ல சாயுறதும், அடிச்சுக்கறதும்-னு ஒரே ஜாலி தான்(யாருக்கோ).இதாவது பரவாயில்ல தமிழ்படம்,எனக்கே ஒருமாதிரி இருந்துச்சு சரி போதும்னு வேறப் பக்கம் திரும்புனா அங்க இங்கிலிஷ் படம் ஓடுது!!! இதையெல்லாம் பார்க்கும்போதே எனக்கு திடிர்னு

முன்னொரு நாள்

*"முன்னொரு நாள்"*                                                                                                 -தமிழ்மறவோன்  "எதிரெதிர் திசையில்  சீறும் வாகனங்களை எதேச்சையாக கடப்பதுப் போல் அவளைக் கடக்க முடியவில்லை,  அவளுக்கும் தான்.தள்ளியிருந்த மரத்தடியில் சற்று தள்ளி தள்ளியே  நின்றுகொண்டோம்.  மின்னலாய் வந்து தெறித்தன அவளுடனான என் நினைவுகள். அவற்றை மறைக்க முயன்று தோற்றவனாய் அவளைப் ஏறிட்டுப் பார்த்தேன்;  அவளும் பார்த்துக்கொண்டுதானிருந்தாள்!!!  அவள் கண்கள் பேசத் துடிப்பதைப் போல் எனக்கு தோன்றியது.  ஒருவேளை பிரம்மையாய் இருக்குமோ???  இருக்கக்கூடும்...  என் சொல் வெட்டுண்ட மின்சாரமாய் ஆனது.  ஆம்,போனது ஏனோ வழக்கம்போல் திரும்பி வரவேயில்லை!!!  அவளுக்கு எப்படியோ தெரியவில்லை??  "சரி போதும்"கிளம்பலாம் என்பது போல் கரம் நீட்டினாள், பிரிய விருப்பமில்லை என்றாலும் சம்பிரதாயமாக  நானும் கரம் குலுக்கி இதழ் விரித்து வராத புன்னகையை வரவழைத்து விடைப்பெற்றேன்.  வீடு திரும்பி என்னறை நுழைந்து, அக்கரம் நுகர்ந்தேன்;  அதில் அவளது மணம் மாறாமல் அப்படியே இருந்தது.  அவ

அந்த பத்து நிமிடம்

*"அந்த பத்து நிமிடம்"*                                                      -தமிழ்மறவோன்   பேருந்தில் இருவர் அமரும் இருக்கையில் வழக்கம்போல தனியாக அமர்ந்திருந்தேன்.  ஓட்டுநரின் எதிரில் ஐவர் அமரும் இருக்கையில் ஒரு தாயும் மகளும் மட்டும் அமர்ந்திருந்தனர்.எங்கோ பார்த்துக் கொண்டிருந்த நான் தற்செயலாக அப்பக்கம் திரும்பினேன். அந்த மகள் ஆர்ப்பாட்டம் இல்லாத அழகியாக இருந்தாள். அவள் அணிந்திருந்த டாப்ஸும் ஜீன்ஸும் ஆபாசமாக இல்லை. பார்க்க பார்க்க ஆசுவாசமாக தான் இருந்தது. நான் பார்த்தபோது ஜன்னலை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த ஜன்னல் கம்பி இவள் ஸ்பரிசத்தால் மகிழ்ச்சியில் துள்ளியது போலிருந்தது. திடிரென்று, அவ்விருவரும் என்னை நோக்க, நான் என்ன எதிர்வினை செய்வதென்று தெரியாமல் தலை தாழ்த்தி தரை நோக்கினேன்.சிறிது நேர நிதானத்திற்கு பின்னர், மெதுவாக அவளைப் பார்த்தேன். இம்முறை அந்த அம்மா என்னை பார்க்கவில்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்டு அப்பெண்ணை ரசிக்க துணிந்தேன். நான் பார்ப்பதை பார்த்த அப்பெண்ணும் என்னை நோக்கினாள். "அவளும் நோக்கினாள் அண்ணலும் நோக்கினான்". அவள் உதடுகளில

முத்தம்

முத்தம்  " இமை மூடி   இதழ் பதித்து          இப்படியே இ(ற)ருந்துவிடலாம் வா!!!! "                                                                                                               - தமிழ்மறவோன்