ஓர் மழை ஞாயிறு
*"ஓர் மழை ஞாயிறு"* -தமிழ்மறவோன் ஓர் ஞாயிறு மதியத்தின் மத்தியில் நாங்கள் இருவரும் சேர்ந்து சமைத்த பாகற்காய் வறுவலையும் கொள்ளு ரசத்தையும் பிரண்டை துவலையும் சாப்பிட்டு முடித்தோம்.ஆம் நாங்கள் சைவம் (உணவில்). இன்று வானம் ஏனோ இருட்டிக் கிடந்தது.வார நாட்களில் ஏற்படும் வேலைப் பளுவினால் ஞாயிறுகளில் கடோத்கஜனாய் உண்டு கும்ப கர்ணனாய் உறங்க விருப்பமில்லை.பெரும்பாலும் ஞாயிறுகள் தான் எங்களை புதுப்பித்துக்கொள்ள உதவுகிறது.நாங்கள் எங்களை உணர்ந்துக்கொள்ள, புரிந்துக்கொள்ள வழிவகுக்கிறது.சாப்பிட்ட பின், வாசலில் நாற்காலியிட்டு அமர்ந்தேன். மழை வருவது போலிருந்தது, இன்பமாயிருந்தது.அவளும் சேர்ந்துக் கொண்டாள்.இன்பம் இருமடங்கு!!! கைகளில் நீர்மோர்;"மழை வரும்போல் இருக்கிறதே,இந்நேரத்தில் மோரா?"இது நான்."நான் விரும்பி செய்தது வேண்டுமானால் குடி", இது அவள்.மறுபேச்சின்றி ஒரே மடக்கில் முடித்தேன். "ஷேல் வி ப்ளே கார்ட்ஸ்" என்ற அவளது அழைபபுக்கு மறுக்காது மறுநொடியே "யா ஷ்யூர் டியர்" என்று ஆரம்பித்தோம் .மிக