விழிமொழியாள்
விழிமொழியாள் |
**கொலைக்காரி**
" இமை விரித்து
விழித் திறந்து
உடல் நுழைந்து
உயிர் துளைக்கும்
கொலைக்காரி நீ"
***************************************
"வில்லாய் ஏறி இறங்கும்
அப்புருவமது எனை
இரக்கமின்றி இழுத்துச்
சென்று யாருமற்ற
இன்பவெளியில்
இட்டுசெல்கிறது ..
இன்பத்தில் தனியாய்
உழல்கிறேன் நான் !!!"
**************************************
**சாக விரும்புகிறேன் **
"சாக விரும்புகிறேன் நான்
ஆம்,கத்தியாய் சீறும்
அவ்விரு கண்களால்
கொன்றுவிடு..
அந்த மரணமும் துச்சம் தான்"
-தமிழ்மறவோன்
Comments
Post a Comment