மீசை வைத்த மிருகம்
இன்று என் தோழி என்னிடம் ஒரு விஷயம் கூறினாள் .அது விஷயம்
என்பதை விட விபரீதம் என்றும் விஷம் என்றும் கூட கூறலாம் .
ஆம்,நடந்தது இதுதான் ...நேற்று தீபாவளி விடுமுறையை முன்னிட்டு என்
தோழி சென்னையில் இருந்து பேருந்தில் நெல்லைக்கு பயணம் செய்கிறாள்.
அப்போது அவளது பின்னால் சீட்டில் இருக்கும் ஒரு பேண்ட் ஷர்ட் போட்ட
நாய் ஒன்று சில்மிஷம் செய்துள்ளது .இதை உணர்ந்த என் தோழி அந்த
நாயை அடிக்காமல் அதட்டி உள்ளார் .இதுதான் அவர் செய்த பெரிய தப்பு.
அவர் திட்டியதை பேருந்தில் உள்ளவர்கள் கவனிக்கவும் இல்லை.சிறிது
நேரத்திற்கு பின் அந்த நாய் தன் வாலை மீண்டும் ஆட்டி உள்ளது .இந்த
முறையும் அந்த வாலை அறுக்காமல் அவனது அருகில் இருக்கும் ஆளை
சற்று இடம் மாறி உட்காருமாறு கூறி உள்ளாள் .அவர் சற்று நல்லவர்
என்பதால் மாறி அமர்ந்துள்ளார் .சற்று நிம்மதி .சிறிது நேரத்திற்கு பின் அந்த
நாய் பின் சீட்டில் இருந்து என் தோழிக்கு அருகில் இருந்த மற்றொரு
பெண்ணையும் சீண்டி உள்ளது.பாவம்,அந்த பெண் தன்னையும் அறியாமல்
உறங்கி கொண்டிருகிறாள் . என்ன செய்வது என்று தெரியாமல் என் தோழி
இரவு முழுவதும் உறக்கம் இன்றி நிம்மதி தொலைத்து ஓர் மீசை வைத்த
மிருகத்துடன் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது .
இதில்,தவறு யார் மீது ?????
அந்த நாய் மீதா?
அந்த நாயை வளர்த்த தாய் மீதா?
இல்லை ,நாய் வாலை நறுக்காத அந்த பெண்ணின் மீதா????
இளைய சமூதாயமே பார்த்து கொள் இதுதான் இன்றைய நிலை.
நாளை இது உனக்கோ,உன் தாய்க்கோ,உன் சகோதரிக்கோ நடக்கலாம்...
பெண்ணினமே,துடித்து எழும் நே இந்த விஷயத்தில் துவண்டு விழுவது ஏன்???
இன்று நீ!!!!!
நாளை?????
-#தமிழ்மறவோன்
Comments
Post a Comment