நாய் காதல்



****நாய் காதல்***** 

(கதையல்ல நிஜம்) 

நேற்று கோவில்பட்டியில் இருந்து நெல்லை செல்வதற்காக பேருந்தில் ஏறினேன்.பேருந்தில் இருவர் அமரும் இருக்கையில் பெரும்பாலும் ஜோடி ஜோடியாக கல்லூரி இளசுகள் அமர்ந்திருந்தனர்.நல்லவேளையாக கணடக்டர் ஸீட் ப்ரீயாக இருந்ததால் அதில் அமர்ந்துக்கொண்டேன் 
(தனியாக தான்).காதில் செவிட்டு மெஷினை (ஹியர்போன்) மாட்டிக்கொண்டு இளையராஜாவை ஓடவிட்டேன்.சற்றே கண் அயர்ந்தேன்.திடிரென்று விழித்துப் பார்த்தபோது எனக்கு முன் இருக்கையில் ஒரு புது ஜோடி முளைத்திருந்தது.இரண்டுமே கல்லூரி சிட்டுகள்.கொஞ்ச நேரம் நல்லாதான் போயிட்டு இருந்தது.திடிர்னு அந்த பய பைய கைய நீட்டுனான்.அந்த பிள்ளையும் யாரும் பார்க்காங்களானு பார்ததுட்டு கைய கோர்த்துக்கிச்சு.அப்ப நான் பார்க்காத மாதிரி இருந்துகிட்டேன்(காறித் துப்புபவர்கள் எச்சில் தெறிக்காமல் துப்பிக்கொள்ளவும்)கைய பிடிக்கிறதும், தோள்ல சாயுறதும், அடிச்சுக்கறதும்-னு ஒரே ஜாலி தான்(யாருக்கோ).இதாவது பரவாயில்ல தமிழ்படம்,எனக்கே ஒருமாதிரி இருந்துச்சு சரி போதும்னு வேறப் பக்கம் திரும்புனா அங்க இங்கிலிஷ் படம் ஓடுது!!! இதையெல்லாம் பார்க்கும்போதே எனக்கு திடிர்னு அவங்க அப்பா அம்மா ஞாபகம் வந்துடுச்சு.எனக்கு வந்து என்னத்துக்குனு கேட்கிறிங்களா???அதுவும் சரிதான். அப்பறம் இன்னொரு விஷயம்,எல்லாத்தையும் இங்கயே பண்ணிட்டிங்கனா வீட்டுல போய் என்னதான்டா பண்ணுவிங்க??? ஒரு வழியா தி.வேலி வந்துச்சு.இப்ப அந்த கைகள் என்ன பண்ணிட்டு இருந்ததுனு நான் பார்க்கல... 
கண்டிப்பாக சும்மாயிருக்காது என்று தெரியும்!!! 
இறங்கும்போது,இ.ராஜா இசைத்துக்கொண்டிருந்தார் 
"என் சோகம் என்னோடுதான்"!!!என்று 
(கல்யாண மாலை பாடல்). 
#நாய் காதல் 
-தமிழ்மறவோன். 
பி.கு:தனிநபரை குறிக்கவில்லை.

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா