தேவதை தரிசனம்



"தேவதை தரிசனம்" 


#தேவதை 
என் டைரிக் குறிப்புகள்:-
-------------------------------------------------------------------------------------------
நீண்ட இடைவெளிக்கு பின் இன்று காலை அவளைப் பார்த்தேன். 
ஆம், அவளைத்தான்!!! 
நான் வண்டியில் சென்ற போது எதிரில் அவள் தந்தையுடன் வண்டியில் சென்றாள்.(படிக்க:என் குறுங்கதை 3)
விவரம் தெரிந்த வயதின்,வளர்ந்த பருவத்தின் பள்ளித்தோழி அவள். வெகு அரிதாக, அவளைப் பற்றிய எண்ணங்கள் என்னுள் எழும்போதெல்லாம் அவளுடனான அந்த நாட்களை அசைப் போடுவது உண்டு. உறங்கா இரவுகளும், முடியா உரையாடல்களும், உலரா முத்தங்களும், அளவில்லா அன்பும் அழகும் எனக்குள் முட்டிமோதும். மிகுந்த பிரயத்தனப்பட்டு என் சிறு இதயத்தினுள் அவை அனைத்தையும் அடக்கி,அடுக்கி வைத்திருந்தேன். இன்று காலை, தீத்தெறிக்கும் அந்த ஒற்றைப் பார்வையில் அனைத்தையும் அடித்து துவம்சம் செய்து மனதின் உச்சாணிக் கொம்பில் ஏறி சட்டமாய் அமர்ந்துக்கொண்டு இறங்க மறுக்கிறாள். அவள் பார்வையை இப்பதிவு சென்றடையுமா என்று தெரியவில்லை. ஆனால்,என்னுடைய இந்த நாள் முழுவதையும் இறகினை தூக்கிச் செல்லும் காற்றைப் போல தூக்கிச் சென்றுவிட்டாள். அற்புதமான நாள் இன்று!!! அவளுடனான நினைவுகளிலிருந்து மீள இயலாமல்...
-தமிழ்மறவோன்.
(பிகு:- நட்பூக்கள், அவள் யாரென்று அலசி ஆராயாமல், துவைத்து தொங்கவிடாமல் இருக்க எல்லாம் வல்ல பாடிகார்ட் முனீஸ்வரனை துணையழைக்கிறேன்).

Comments

Post a Comment

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா