'அது'
இன்றுதான் 'அதை' இத்தனை அருகில் காண்கிறேன்..
பத்தாம் நாள் பிறைப் போல் வளைந்திருக்கிறது...
'அதை' விரல்களால் இப்படி தீண்டுவேன்
என்று ஒருபோதும் எண்ணியதில்லை..
'அது' எனக்குள் ஒரு பதட்டத்தை உருவாக்குகிறது..
ஒரு அதிர்வை கடத்திச் செல்கிறது..
ஒரு பயத்தை உண்டு செய்கிறது..
இதழ் பதிக்க முன்னேறுகிறேன்,
பின் நகர்ந்து விடுகிறேன்
இப்படி முன்னும் பின்னுமாய்
அங்கே ஒரு விளையாட்டு அரங்கேறுகிறது..
இறுதியில், உதட்டோடு உதடு பதித்து
விளையாட்டை நானே முடித்து வைக்கிறேன்,
.
.
.
.
.
.
.
.
பீங்கான் கோப்பையில் இஞ்சி டீ குடித்த தருணம்!!!
-தமிழ்மறவோன்
Comments
Post a Comment