சென்னை டூ திருநெல்வேலி


சென்னை வந்தேறிகளான நாம் அனைவருமே நம் ஊருக்கு ரயிலில் சென்றிருப்போம். தூங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென்று எழுந்து பார்க்குறீர்கள் வயற்காட்டின் நடுவே ரயில் சென்றுக்கொண்டிருக்கிறது. அது எந்த ஊர் என்று எப்படி கண்டுபிடிப்பீர்கள்??
நான் ஒரு வழி சொல்லவா?
வயலின் நடுவில் மோட்டார் ரூமில் இருக்கும் விளம்பரங்களின் மூலம் கண்டுபிடிக்கலாம்,
S.M Silks – காஞ்சிபுரம்
கன்னிகா பரமேஸ்வரி – விழுப்புரம்
சாரதாஸ் – திருச்சி
ராஜ் மஹால் – மதுரை
கூடலிங்கம், ஜோதிலிங்கம் – கோவில்பட்டி
அதை தாண்டிவிட்டால் இரு பக்கங்களிலும் ஆர்.எம்.கே.வி, போத்தீஸ் விளம்பரங்கள் தோன்ற ஆரம்பிக்கும்.
நெல்லை எல்லைக்குள் வந்துவிட்டீர்கள் என்றர்த்தம்!
வாங்கலே..
-பிகு
20-5-2017

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா