தேவதைகளுக்கு சமர்ப்பணம்


*தேவதைகளுக்கு சமர்ப்பணம்*

பெண்களுக்கு ஆண்களிடம் சொல்வதற்கு விஷயங்கள்
ஏராளம் இருக்கின்றன. சிறுவயதில் ஆடிய கண்ணாமூச்சியாட்டம், செல்லமாய் வளர்த்த நாய்க்குட்டி,

அது இறந்தப்போது அழுது புரண்டது; அதற்கு இணையாய் கிளி வாங்கிக் கேட்டது. அதனுடன் தோட்டத்தில் அமர்ந்து பேசுவது. தனக்கு பிடித்த வான் நீலம்; அதன்பால் கொண்ட காரணமில்லா ஏக்கம்,மயக்கம்!!! முதன்முதலில் அம்மா வாங்கிக் கொடுத்த புடவை; அப்போது தைத்து, இப்போது இறுகிப் போயிருக்கும் சட்டை.நீள் கூந்தலில் சூடிய ஒற்றை ரோஜாவைப் பற்றிய கதை. முதல்நாள் கட்டிய காட்டன் சேலையை பற்றிப் பேச ஆயிரம் விஷயமுண்டு அவர்களிடம். ஆண்களிடமும் இத்தகைய விஷயங்கள், அனுபவங்கள் இருக்கலாம்; ஆனால் அடுத்தவர் ரசிக்கும்படி சொல்வதென்பது சற்றே சிரமம்தான்.பெண்கள் அனைவருக்கும் இக்கலை வாய்ப்பது இயல்பு.மேலும், பெண் சொல்லும் இவ்விஷயங்களுக்கு "ம்ம்ம்" கொட்டுவதைக் காட்டிலும் வேறென்ன இன்ப அனுபவம் இருந்துவிட முடியும் ஆணுக்கு???
பெண்களின் உலகு அழகு!!!!
பெண்களால் ஆன உலகு பேரழகு!!!!!
-தமிழ்மறவோன்.

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா