ஜி.ஸ்பாட்டும் - உச்சமடைதலும்!



50000 கொடுத்தால் உச்சமடையலாம்!


0

50,000 ரூபாய் கொடுத்தால் போதும் (பெண்கள் மட்டும்). உடலுறவில் உச்சத்தை அடையலாம் என்ற ரீதியில் இந்தியா டுடே-வில் ஒரு கட்டுரை.

அப்படி என்ன தான் இருக்கு என்று உள்ளே களமாடினால், பொதுவெளியில் தெரியாமல் புது புது விஷயங்கள் சமூகத்தில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. விஷயம் இதுதான் ஆண்களுக்கு வயாகரா போல் பெண்களுக்கு ‘ADDYL’ என்றொரு மேட்டர் வந்திருக்கிறது. அதன் விலைதான் 50,000. நான்கு மாதங்களுக்கு இதன் வீரியம் இருக்குமாம்.

ஜி.ஸ்பாட் பற்றி அநேக பேர் கேள்விப்பட்டிருப்போம். படாதவர்களுக்காக மேலோட்டமாக சொல்கிறேன். ஜி.ஸ்பாட் என்பது உடலுறவின் போது உணர்ச்சிகளை தூண்டக்கூடிய ஒரு பகுதி அல்லது உறுப்பு என்றுக்கூட வைத்துக்கொள்ளலாம். ஒரு பெண் உச்சமடைவதற்கு இந்த ஜி.ஸ்பாட் ரொம்ப முக்கியம். உதாரணமாக, ஒரு பெண்ணின் தொடையிடுக்கு, பிறப்புறுப்பின் மேற்பகுதி, மார்பு காம்புகள், பின்னங்கழுத்து, உள்ளங்கால் பாதம் போன்ற இடங்கள் சொல்லப்படுவதுண்டு. இந்த இடங்களை தூண்டுவதன் மூலம் ஒரு பெண்ணை பலமுறை உச்சம் அடைய வைக்கலாம். இவை மட்டுமன்றி வேறு சில பாகங்களும் இருக்கும்; ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த பகுதிகள் வேறுபடும்.

இதுகுறித்து 1950-களிலே ஒரு கோஷ்டி தோண்டி துருவ ஆரம்பித்துவிட்டது. அதாவது, இந்த ஜி.ஸ்பாட் என்பது ஒரு உறுப்பாக இருக்கிறதா? அல்லது அதெல்லாம் ஒரு பெண்ணுடைய உளவியல் தானா என்று ஆரம்பித்திருக்கிறார்கள். இருக்கு..இல்ல..இல்ல..இருக்கு-னு ஒருவழியா 2016ல ஒரு முடிவுக்கு வந்துட்டாங்க!. முடிவு என்னவென்றால், ஜி.ஸ்பாட் என்பது உடலியல் மற்றும் உளவியல் தொடர்பானதுதான். அதிலும் மூன்று பாகங்கள் தான் இந்த உச்சமடைதலை செம்மையாக செய்துக்கொண்டிருக்கிறதாம். அதாகப்பட்டது, 1. கிளிட்டோரிஸ் 2. வடிகுழாய் 3. யோனி என்று சொல்லக்கூடிய பெண்ணுறுப்பு.

விவாகரத்து வழக்குகள் அசூரத்தனமாக வளர்ந்து வருவதற்கான பின்புலத்தை ஆராய்ந்தால், பாலியல் தொடர்பான பிரச்சனைகள் தவிர்க்க முடியாதவை. கணவனால் தன்னை திருப்திப்படுத்த முடியவில்லை என்ற ரீதியில் வரும் வழக்குகள் அதிகம்.

சரி, அதற்கும் இந்த ஜி.ஸ்பாட் மேட்டருக்கு என்னயா சம்பந்தம்?? சம்பந்தப்படுத்திக்கிட்டேன்!

ஆம், இப்போது மருத்துவ சந்தையில், பெண்களின் உடலில் இருக்கும் இந்த ஜி.ஸ்பாட் ஏரியாக்களை தூண்டிவிடுவதற்கான மருத்துவ முறைகள் வந்துவிட்டதாம். ஆண்கள் தங்களது துணைகளை சரிவர கையாளாததால், வயது வித்தியாசமின்றி பெண்கள் இந்த சிகிச்சை முறைக்காக நாடி வருவதாக அந்த மருத்துவர் குறிப்பிடுகிறார். இந்த மருத்துவ முறையின் மூலம் கைமேல் பலன் கிட்டியுள்ளதாக அந்த பெண்களே கூறுவதாக அந்த மருத்துவர்களே (!) கூறுகிறார்கள். மருத்துவ துறையில் நல்ல முயற்சிதான். ஆண்களுக்கென்று விதவிதமான முஸ்லி பவர்-களும், சேலம் தாத்தாவும் இருக்கும் இந்த சமூகத்தில் பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கவனிக்க வேண்டியது வரவேற்க வேண்டிய ஒன்று. ஆனால், இது வெறும் பணம் கறக்கும் செய்கையாக இருந்துவிடக்கூடாது. அதில் நம்மாட்கள் போய் வீழ்ந்துவிடக்கூடாது என்பதே என் விருப்பம்.

இதற்கெல்லாம் நதிமூலம் ரிஷிமூலம் எங்கே இருக்கிறதென்று பார்த்தால், நமது பெண்களுக்கு தான் ஜி.ஸ்பாட் குறித்த அறிவு பூஜ்யமாக இருக்கிறதே பின்னர் எப்படி அவர்கள் தன் துணையிடம் தனக்கு இது இது இங்கு இங்கு தேவை என்று சொல்வார்கள்?? அப்படியே சொன்னாலும், மெஷின்போல் இயங்கும் நம்மாட்களுக்கு ஜி.ஸ்பாட் தெரியுமா? ஆர்கஸம் தான் புலப்படுமா??

இவையெல்லாம் தெரிந்தும் பிரச்சனை என்றால் தாராளமாக மருத்துவ உதவியை நாடலாம். ஆனால், மாத்திரையாலும், ஊசியினாலும் மட்டும் இன்பம் அடைந்துவிட முடியாது என்பதையும் கவனத்தில் கொள்க!
சில விஷயங்களில் விழிப்பாக இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஒருவேளை அதேது அறியாமல் அம்மாஞ்சியாக இருந்தீர்களானால் உங்களை நன்றாக வைத்து செய்து அனுப்பும் இந்த கேடுக்கெட்ட, பணம் புடுங்கி சமூகம்!

பிகு :- 1. எனக்கு திருமணம் ஆகவில்லை
       2. மேலே குறிப்பிட்டுள்ளதெல்லாம் வெறும் ஏட்டுக்கல்வி தான்.
       3. இதற்கு மேல் விவரம் தெரிந்தவர்கள் பகிர்ந்துக்கொள்ளவும்.

Source : India Today February Edition.

-பிகு
30-3-2017

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா