அவர்களிருவரும்

அதிகாலை ரயில் நிலையம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது.
ஒண்ணாம் நம்பர் பிளாட்பாரத்தின் கிரில் கேட்டருகே ஒரு நாய் இன்னொரு நாயை புணர்ந்துக் கொண்டிருக்கிறது.
அந்த கணவன் முட்டியால் மனைவியை இடிக்கிறான்
அவள் வெட்கத்தை மறைக்க முயன்றவளாய் தோற்கிறாள், அவர்கள் புதிதாய் திருமணமானவர்களாக இருக்கவேண்டும். 
ஒரு யுவதிகள் கூட்டம் அந்நாய்களை கடக்கிறது, கொல்லென்று ஒரு சிரிப்பு சத்தம்!!
காபி போன்றிருக்கும் ஒரு பானத்தை குடித்துக்கொண்டே யாரும் தன்னை பார்க்கவில்லை என்பதை உறுதி செய்த பின் ஓரக்கண்ணால் அதைப் பார்த்து உள்ளூர ரசிக்கிறான் ஒரு டீ-சர்ட் இளைஞன்;
"ஏ செவத்த மூதிகளா, இதுகளும் மனுசன மாதிரியே ஆரம்பிச்சுட்டுக" என்று காறித்துப்புகிறார் கிழவர் ஒருவர் எச்சிலும் சளியும் கலந்து விழுந்து, மண்ணில் வடிவமில்லா ஒரு வடிவத்தை உண்டாக்குகிறது.
"இந்த நாய் முகத்த பாரேன்
எந்த உணர்ச்சியுமில்லாம, எந்த சந்தோஷமும் இல்லாம தேமேனு கால விரிச்சு நின்னுட்டு இருக்கு, நம்மள மாதிரியே;
அடுத்த ஜென்மத்துல பொம்பள நாயா கூட பொறந்துற கூடாதுடி" என்று கஸ்டமரை தேடிச்சென்றனர் அவர்களிருவரும்!!!
-பிகு

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா