பளிச்சென் றுந்தன் ஞாபகங்கள்

உன் தோப்பனார் ஆடிய ஊஞ்சலின் கிறீச் ஒலி..
உன் அண்ணா கசியவிட்ட இளையராஜாவின் சோக கீதங்கள்,
உன் ஜமுனா அக்கா நடையிலமர்ந்து கட்டிய காட்டு மல்லி..
உன் அம்மா சுற்றி வந்த துளசி மாடம்..
உச்சிக்குடுமியிட்டு
பாவாடை நுனிப்பிடித்து
மழலை மொழிப் பேசி
விச்சு மாமா என்று ஓடிவந்து ஒரண்டை இழுப்பாயே???
இவையாவுமின்றி இருள் கவிழ்ந்து கிடக்கும் அவ்வீட்டினை கடக்கையிலெல்லாம்,
பளிச்சென் றுந்தன் ஞாபகங்கள்
மஞ்சரி!!!
-பிகு

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா