இக்கவிதை அவளுக்கானது

தியாகராஜநகர் ரயில்வே கேட்டை கடக்க காத்து நிற்கலாம்..
அன்பு நகர் பூங்காவில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கலாம்..
புனித பேதுரு ஆலயத்தில் முட்டிக்கால் போட்டு முக்காடிட்டு அமர்ந்திருக்கலாம்..
சித்தி விநாயகருக்கு பறக்கும் முத்தம் கொடுத்துவிட்டு ஸ்கூட்டியில் பறக்கலாம்..
வடை கடையில் சட்னி யில்லாமல் உளுந்த வடை சாப்பிட்டுக் கொண்டிருக்கலாம்..
இரட்டைப் பனை அருகே கனரா பேங்க் ஏடிஎம்மில் பணமெடுத்துக் கொண்டிருக்கலாம்..
வண்டியில் அவள் கணவனுடன் செல்லுகையில் என்னை திரும்பிப் பார்த்து பழைய நினைவுகளை கிளறிவிடலாம்...
அவளுக்கு பெயர் ஏதோ ஒன்றாக இருந்துவிட்டுப் போகட்டும்..
அவள் என் "முன்னாள் காதலியாக" இருப்பதால் இக்கவிதை அவளுக்கானது!!!!
-பிகு

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா