#சென்னை_டேஸ்

“நாயன்பு”
-------------------------------------------------------------------------
நீங்கள் வெளியில் செல்லும்போது உங்களது குழந்தை, உங்களுடன் வரவேண்டும் எனறு அடம்பிடித்தால் என்ன செய்வீர்கள்?? அவர்களை வண்டியில் அமர வைத்து ஒரு ரவுண்ட் அடித்து இறக்கிவிட்டு செல்வீர்கள் தானே? 
இன்று காலை கோடம்பாக்கம் ரயில்நிலையம் செல்லும் வழியில் பார்த்ததை பகிர்கிறேன், படியுங்கள்.

ஒரு வீட்டில் ஒருவர் வண்டியில் வெளியே கிளம்புகிறார். அதை கண்ட அந்த வீட்டின் நாய் கேட் அருகில் நின்று சத்தமாக குரைக்கிறது. நல்ல வளர்ந்த நாய்; உடனே அந்த நபர் அந்த நாயை வண்டியின் முன்னால் நிற்க வைத்து ஒரு சிறிய ரவுண்ட் அடித்து மீண்டும் வீட்டு வாசலில் விட்டு செல்கிறார். அந்த நாயும் சமர்த்தாக உள்ளே சென்று விடுகிறது.

இதை பார்த்தப் பொழுது இப்படியும் மனிதர்களா? இப்படியும் நாய்களா? என்று தோன்றியது. நிறைய நாயன்பர்களை பார்த்திருக்கிறேன்; பாசக்கார நாய்களை பார்த்திருக்கிறேன்.,வாஞ்சையான ஓனர்களையும் பார்த்திருக்கிறேன். ஆனா இந்த அளவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கொண்ட ரெண்டு பேரை பார்த்ததே இல்ல….
இது உலக மகா பாசம்டா சாமி!!!
-தமிழ்மறவோன்

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா