கோழி குஞ்சு செத்துப் போச்சு

கோழிக் குஞ்சு செத்துப் போறதுனா சும்மாவா??
o

இன்று காலை பேருந்தில் சென்றுக் கொண்டிருந்தேன். கூட்டம் அதிகமில்லை, ஆனாலும் அமர இடமில்லாததால் நின்றுக்கொண்டுதான் வந்தேன். என்னருகில் ஒரு முதியவரும் நின்று வந்தார். பக்கத்தில் நின்றதிலிருந்தே என்னை மேலும் கீழும் ஒரு மாதிரி பார்த்து வந்தார். என்ன நினைத்தார் என்று தெரியவில்லை; திடீரென்று தனக்கு அருகில் நின்ற ஒருவரிடம், ”இப்படித்தான், எங்கூருல போன பங்குனி மாச வெக்க தாங்காம ஒரு 40-50 கோழி குஞ்சு செத்துப் போச்சு” என்று கூறிக்கொண்டிருந்தார். ”என்ன டா சம்பந்தமே இல்லாம சொல்றாரே” என்று தற்செயலாக பார்க்கிறேன், நான் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட்டைப் பார்த்துவிட்டுதான் அவர் அப்படி கூறி இருக்கிறார். ரூம் சென்ற உடன் முதல் வேலையாக அந்த ஜீன்ஸ் பேண்ட்டை தூக்கி எறிந்துவிட்டேன்.

பின்ன என்னங்க, அந்தாளு என்னமோ 40 50 குஞ்சு செத்துப் போகுதுங்கறாரு!!
குஞ்சு செத்துப் போறதுனா சும்மாவா??
Be Carefullllll…
-தமிழ்மறவோன்
18-11-2016

Comments

Popular posts from this blog

காமத்தின்பால் சில கவிதைகள்

என் உயிர் நீதானே ...

முள் - சாரு நிவேதிதா